welcome to my blog

சனி, 15 டிசம்பர், 2012

நட்பு .........காதல் ........






காதல் ..................நீ ஒருவர் மீது கொள்ளும் அதீக அன்பு 
நட்பு  ...............நீ ஒருவர் மீது வைக்கும் ஆழமான அன்பு 


ஒருவர் உனக்கு வேண்டும் என்பது நட்பு ............... உனக்கு மட்டும்தான் வேண்டும் என்பது காதல் 
எதுவென்றாலும் விட்டுகொடுப்பது நட்பு......... விட்டுகொடுக்காமல் அடம்பிடிப்பது காதல் 
உதவி வேண்டும் என்று கேட்பது நட்பு ............புரிந்து செய்யட்டும் என எதிர்பார்ப்பது காதல் 
வாழ்க்கையை சரி செய்து வழி காட்டுவது  நட்பு ..............நெறிப்படுத்தி நேர் செய்வது காதல் 


நட்பு என்றும் உண்மையாய் இருக்கும் ........உண்மையான காதல் என்றும் உடனிருக்கும் 
வாதம் ,,,,, நட்பு பெரிது காதல் பெரிது என்பதில்லை ,
இரண்டும் இல்லை என்றால் உன் வாழ்வை நீ வாழவில்லை என்பதே  உண்மை ...........!

புதன், 12 டிசம்பர், 2012

அம்மா............!








நான் அகரம் கற்க முன்பே அன்பை அறிவித்தவள்  நீ .........
பிரிவு  எனும் சொல்லை அறிய முதலேயே அதை உணர வைத்தவள் நீ ........
பள்ளி முதல் நாள் பிரிவில் என்னை அழ வைத்தவள் நீ .....
நான் என்னை அறிய முன்பே என்னை அறிந்தவள் நீ .....

அன்பானவர்கள்  பிரிந்தால் அழ வேண்டும் 
அவர்களுக்கு அடிபட்டால் பதற வேண்டும் 
உதவி என்றால் முன்வர வேண்டும் ....என்று 
வாழ்கைக்கு இலக்கணம் கொடுத்த தாயே 

வாழ்க பலநூறு ஆண்டு ..... இளைப்பாற உன் அன்பு வேண்டும் அம்மா............!

புதன், 5 டிசம்பர், 2012

பிரியாது .......அழியாது......

கடலை விட்டு அலை பிரிந்தாலும் 
வானை விட்டு நிலா பிரிந்தாலும் 
ஓவியத்தை விட்டு கோடுகள்  பிரிந்தாலும் 
பூவை விட்டு மணம்  பிரிந்தாலும் 
என்றுமே பிரியாது உன்னுடன் நான் கொண்ட உறவு......!

நீரோடை இல் பட்டுத்தெறிக்கும் சூரிய ஒளி போல 
மலை மேல் படரும் பனிச்சாரல் போல 
விண்ணை முட்டும் மேக கூடங்கள் போல 
காற்றை கிழிக்கும் வான் பறவை சிறகு போல 
என்றுமே அழியாது தத்தளிக்கும் உன் நினைவுகள் .......என் மனதில்......!

(  2002 இல் எழுதப்பட்டது  ) 

திங்கள், 3 டிசம்பர், 2012

கொல்லாதே...!


பார்வைகள் புதுவார்த்தை பரிமாறுதே 
இதயங்கள் இடம்மாறுதே 
உன்னால் என் நிமிடங்கள் அழகானதே 
வலிகூட சுகமானதே ...!

உன் பேரை மட்டும் தினம் 
நெஞ்சுக்குள் சொல்லி சொல்லி 
என் பேரை இன்று மறந்தேனே
மஞ்சள் வெயிலே கொஞ்சல் மொழியே 
வெட்கத் திமிரே சாய்க்காதே 
ஆசைக்கனவே மீசைப்புயலே 
நித்தம் இசையில் நீ கொல்லாதே...!

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

நானும்






வணக்கம் ............!


பல நாட்களாக இருந்த என்னுடைய ஆசை ஒரு வலைபூ ஆரம்பிக்க வேண்டும் என்பது இந்த நாட்களில்தான் அது நிறைவேறி இருக்கிறது.

பல வருடங்களாக மாதங்களாக நாட்களாக வலைபூக்களில் இணைந்திருக்கும் அனைவரும் என்னை எற்றுகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த வலைப்பூவை உருவாக்க எனக்கு தூண்டுகோலாக இருந்த என்னுடைய குருவுக்கும்  மாஸ்டர் சீரானுகும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் 

நன்றி ...!