நான் அகரம் கற்க முன்பே அன்பை அறிவித்தவள் நீ .........
பிரிவு எனும் சொல்லை அறிய முதலேயே அதை உணர வைத்தவள் நீ ........
பள்ளி முதல் நாள் பிரிவில் என்னை அழ வைத்தவள் நீ .....
நான் என்னை அறிய முன்பே என்னை அறிந்தவள் நீ .....
அன்பானவர்கள் பிரிந்தால் அழ வேண்டும்
அவர்களுக்கு அடிபட்டால் பதற வேண்டும்
உதவி என்றால் முன்வர வேண்டும் ....என்று
வாழ்கைக்கு இலக்கணம் கொடுத்த தாயே
வாழ்க பலநூறு ஆண்டு ..... இளைப்பாற உன் அன்பு வேண்டும் அம்மா............!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக